கோவை சின்னவேடம்பட்டியில் குருவணக்க நாள் விழா: மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு

கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள சிரவணபுரம் கெளமார மடாலயத்தில் வரும் 21-ம் தேதி முதலாம் ஆண்டு குருவணக்க நாள் விழா நடைபெறுகிறது. இந்த விழா தற்போதைய தலைமுறைக்கு மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிரவணபுரம் கெளமார மடாலயத்தில் வரும் 21-ம் தேதி அன்று முதலாம் ஆண்டு குருவணக்க நாள் விழா நடைபெற உள்ளது. இந்த விழா குழந்தைகள், குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் தற்போதைய தலைமுறையினர் நோய் நொடி இல்லாமல் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனருமான குமாரசாமி கூறுகையில், "தற்போதைய தலைமுறைக்கு மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்த குருவணக்க நாள் விழா அமையும்" என்று தெரிவித்தார்.



விழா நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் குருமூர்த்தம், திருக்கோயில் வழிபாடு, வள்ளிக் கும்மி, நடனம், மாயாஜால நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

மேலும், மடாலய வளாகத்தில் கண் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, புத்தகக் கண்காட்சி, இயற்கை கண்காட்சிகள் போன்ற பிற நிகழ்ச்சிகளும் நடைபெறும் என கெளமார மடாலயம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...