கோவையில் 52 பேருக்கு டெங்கு காய்ச்சல்: கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கோவையில் கடந்த ஒன்றரை மாதங்களில் 52 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.


Coimbatore: கோவையில் பெய்து வரும் கனமழையால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 52 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மாவட்ட அளவில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழைநீர் தேங்கிய இடங்களில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது: "டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் வகை கொசுக்கள் மழை-குளிர் வகை கொசுகள் கடிப்பதால் மனிதர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுகிறது. கோவை மாவட்டத்தில் ஜூன் மாதம் 34 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஜூலை மாதத்தில் இதுவரை 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது."

"வீடுகளை சுற்றியுள்ள டயர், ஆட்டுக்கல், டின்கள், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், கட்டுமான இடங்கள் போன்றவற்றில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே மேற்கொண்ட தேவையற்ற பொருட்களை கட்டி மழைக்காலத்தில் குப்புற கவிழ்த்து வைக்கலாம். அல்லது மழைநீர் புகாதவாறு பழைய பொருட்களை மூட்டையாக வைக்கலாம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக திகழும் பழைய பொருட்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வீட்டுக்குள் இருக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றாத 50 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஊரக, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் டெங்கு அதிகம் பாதித்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள சுமார் 90 இடங்களில் சுகாதார பணியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தி கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...