கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மீது மீண்டும் வழக்குப்பதிவு

கோவையில் இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர் மீது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிட்டதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவர் மீதான இரண்டாவது வழக்கு.



Coimbatore: கோவையில் இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் மீது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிட்டதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெரைட்டிஹால் ரோடு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், சமூக வலைதள பக்கங்களை கண்காணித்தபோது, இந்து முன்னணி கோவை மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர் என்பவரது பேஸ்புக் பக்கத்தில் கோயில் இடிப்பு தொடர்பாகவும், அரசை விமர்சிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து ஜெயபாலன் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜெய்சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது ஜெய்சங்கர் மீது பதிவாகும் இரண்டாவது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி, நபிகள் நாயகத்தை அவதூறு செய்ததாக சிங்காநல்லூர் போலீசார் அவரை கைது செய்தனர்.

ஹிந்து முன்னணி தலைவர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டதை கண்டித்து பிப்ரவரி 1 ஆம் தேதி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நடந்த போராட்டத்தில் ஜெய்சங்கர் பேசியபோது, நபிகள் நாயகத்தை அவதூறு செய்யும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி, ஜெய்சங்கரை கைது செய்யக்கோரி காவல்துறையிடம் மனு அளித்தன. இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...