விளாங்குறிச்சி ரோடு ஏறுதளம் பிரச்சினை: முன்னாள் எம்எல்ஏ நா கார்த்திக்கிடம் மனு

கோவை விளாங்குறிச்சி ரோடு - அவிநாசி ரோடு சந்திப்பில் ஏறுதளம் அமைக்கும் பணியால் பொதுமக்கள் பாதிப்பு. இது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ நா கார்த்திக்கிடம் மனு அளிக்கப்பட்டது.



Coimbatore: கோவை மாநகராட்சி வார்டு எண் 26க்குட்பட்ட விளாங்குறிச்சி ரோடு - அவிநாசி ரோடு சந்திப்பில் ஏறுதளம் அமைக்கும் பணி தொடர்பாக பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று கோவை மாநகர மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் நா கார்த்திக் முன்னாள் எம்எல்ஏவை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது தொடர்பான மனுவை அளித்தனர். இந்த சந்திப்பில் மறுமலர்ச்சி திமுக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, மறுமலர்ச்சி திமுக மாநகர மாவட்ட துணை செயலாளர் பயணியர் தியாகு, பீளமேடு பகுதி கழக செயலாளர் எஸ் பி வெள்ளியங்கிரி, திராவிட முன்னேற்றக் கழக பீளமேடு பகுதி கழக செயலாளர் துரைசெந்தமிழ்ச்செல்வன், 26 வது வார்டு வட்டக் கழக செயலாளர் ஆ மாடசாமி, மாவட்ட பிரதிநிதி பூவே துரைசாமி, வட்டக் கழகப் பிரதிநிதி சதீஷ் கோகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, விளாங்குறிச்சி ரோட்டில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

Hindu Munnani functionary arrested for slandering Prophet Muhammad in Coimbatore - Simplicity https://simplicity.in/coimbatore/english/news/77769/

Newsletter

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...