விளாங்குறிச்சி ரோடு ஏறுதளம் பிரச்சினை: முன்னாள் எம்எல்ஏ நா கார்த்திக்கிடம் மனு

கோவை விளாங்குறிச்சி ரோடு - அவிநாசி ரோடு சந்திப்பில் ஏறுதளம் அமைக்கும் பணியால் பொதுமக்கள் பாதிப்பு. இது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ நா கார்த்திக்கிடம் மனு அளிக்கப்பட்டது.



Coimbatore: கோவை மாநகராட்சி வார்டு எண் 26க்குட்பட்ட விளாங்குறிச்சி ரோடு - அவிநாசி ரோடு சந்திப்பில் ஏறுதளம் அமைக்கும் பணி தொடர்பாக பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று கோவை மாநகர மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் நா கார்த்திக் முன்னாள் எம்எல்ஏவை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது தொடர்பான மனுவை அளித்தனர். இந்த சந்திப்பில் மறுமலர்ச்சி திமுக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, மறுமலர்ச்சி திமுக மாநகர மாவட்ட துணை செயலாளர் பயணியர் தியாகு, பீளமேடு பகுதி கழக செயலாளர் எஸ் பி வெள்ளியங்கிரி, திராவிட முன்னேற்றக் கழக பீளமேடு பகுதி கழக செயலாளர் துரைசெந்தமிழ்ச்செல்வன், 26 வது வார்டு வட்டக் கழக செயலாளர் ஆ மாடசாமி, மாவட்ட பிரதிநிதி பூவே துரைசாமி, வட்டக் கழகப் பிரதிநிதி சதீஷ் கோகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, விளாங்குறிச்சி ரோட்டில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

Hindu Munnani functionary arrested for slandering Prophet Muhammad in Coimbatore - Simplicity https://simplicity.in/coimbatore/english/news/77769/

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...