பொள்ளாச்சியில் சிற்பி இலக்கிய விருது விழா: பல எழுத்தாளர்களுக்கு கௌரவம்

பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் சிற்பி இலக்கிய விருது விழா நடைபெற்றது. பல்வேறு எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிற்பி பாலசுப்ரமணியத்தின் இரு நூல்கள் வெளியிடப்பட்டன.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம் கல்லூரியில் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் சிற்பி இலக்கிய விருது விழா 16-07-2024 அன்று நடைபெற்றது. என்.ஜி.எம் கல்லூரியின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் விழாவுக்கு தலைமை தாங்கினார்.

விழாவில், பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. முனைவர் க.பஞ்சாங்கம் இந்த நூல்களை வெளியிட்டு அறிமுக உரையாற்றினார். முனைவர் கி.பார்த்திபராஜா நூல்களைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். "நறிவிலி" எனும் கவிதைத் தொகுப்பும், மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதைகளின் மொழிபெயர்ப்பான "உழவனின் பாடல்" ஆகிய இரு நூல்களும் வெளியிடப்பட்டன.



2023ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருதுகள் கவிஞர் மற்றும் திரைப்பட இயக்குநர் பிருந்தாசாரதி மற்றும் கவிஞர் கோ.வசந்தகுமாரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டுக்கான விருதுகள் ஓவியக் கவிஞர் அமுதபாரதி மற்றும் கவிஞர் நா.வே.அருள் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. அதே ஆண்டுக்கான சிற்பி இலக்கியப் பரிசு கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டது. மேலும், பதிப்பியல் வித்தகர் எனும் விருது மணிவாசகர் பதிப்பகத்தைச் சார்ந்த இராம.குருமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது.



விருதாளர்கள் குறித்த அறிமுக உரையை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த கவிஞர் க.அம்சப்ரியாவும் கவிஞர் இரா.பூபாலனும் வழங்கினர். கவிஞர் நந்தலாலா விருதுபெற்றவர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். கிருங்கை சேதுபதி நன்றியுரை வழங்கினார். பேராசிரியர் வடிவேல் மற்றும் பேராசிரியர் சேதுபதி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.



நாஞ்சில்நாடன், சுப்ரபாரதிமணியன், விஜயா மு.வேலாயுதம் உட்பட பல்வேறு எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், இலக்கிய அமைப்பினர் என திரளானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். சிற்பி அறக்கட்டளை, என்.ஜி.எம் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ஆகியவை இணைந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...