பொள்ளாச்சியில் சிற்பி இலக்கிய விருது விழா: பல எழுத்தாளர்களுக்கு கௌரவம்

பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் சிற்பி இலக்கிய விருது விழா நடைபெற்றது. பல்வேறு எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிற்பி பாலசுப்ரமணியத்தின் இரு நூல்கள் வெளியிடப்பட்டன.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம் கல்லூரியில் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் சிற்பி இலக்கிய விருது விழா 16-07-2024 அன்று நடைபெற்றது. என்.ஜி.எம் கல்லூரியின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் விழாவுக்கு தலைமை தாங்கினார்.

விழாவில், பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. முனைவர் க.பஞ்சாங்கம் இந்த நூல்களை வெளியிட்டு அறிமுக உரையாற்றினார். முனைவர் கி.பார்த்திபராஜா நூல்களைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். "நறிவிலி" எனும் கவிதைத் தொகுப்பும், மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதைகளின் மொழிபெயர்ப்பான "உழவனின் பாடல்" ஆகிய இரு நூல்களும் வெளியிடப்பட்டன.



2023ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருதுகள் கவிஞர் மற்றும் திரைப்பட இயக்குநர் பிருந்தாசாரதி மற்றும் கவிஞர் கோ.வசந்தகுமாரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டுக்கான விருதுகள் ஓவியக் கவிஞர் அமுதபாரதி மற்றும் கவிஞர் நா.வே.அருள் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. அதே ஆண்டுக்கான சிற்பி இலக்கியப் பரிசு கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டது. மேலும், பதிப்பியல் வித்தகர் எனும் விருது மணிவாசகர் பதிப்பகத்தைச் சார்ந்த இராம.குருமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது.



விருதாளர்கள் குறித்த அறிமுக உரையை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த கவிஞர் க.அம்சப்ரியாவும் கவிஞர் இரா.பூபாலனும் வழங்கினர். கவிஞர் நந்தலாலா விருதுபெற்றவர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். கிருங்கை சேதுபதி நன்றியுரை வழங்கினார். பேராசிரியர் வடிவேல் மற்றும் பேராசிரியர் சேதுபதி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.



நாஞ்சில்நாடன், சுப்ரபாரதிமணியன், விஜயா மு.வேலாயுதம் உட்பட பல்வேறு எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், இலக்கிய அமைப்பினர் என திரளானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். சிற்பி அறக்கட்டளை, என்.ஜி.எம் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ஆகியவை இணைந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...