கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ, பொழுதுபோக்கவோ அல்லது செல்பி எடுக்கவோ செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஆற்றங்கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மழையின் போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

மழை பெய்யும் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், உயர் மின்சார பகுதிகள் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் மின்சாதனங்களைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். மின்கம்பங்களில் கால்நடைகளைக் கட்டக்கூடாது.

வெள்ள அபாயம் அல்லது பிற இன்னல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தாழ்வான பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்திருந்தால், நிவாரண முகாம்களில் தங்க விரும்புவோர் இதே எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...