கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ, பொழுதுபோக்கவோ அல்லது செல்பி எடுக்கவோ செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஆற்றங்கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மழையின் போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

மழை பெய்யும் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், உயர் மின்சார பகுதிகள் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் மின்சாதனங்களைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். மின்கம்பங்களில் கால்நடைகளைக் கட்டக்கூடாது.

வெள்ள அபாயம் அல்லது பிற இன்னல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தாழ்வான பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்திருந்தால், நிவாரண முகாம்களில் தங்க விரும்புவோர் இதே எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...