கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ, பொழுதுபோக்கவோ அல்லது செல்பி எடுக்கவோ செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஆற்றங்கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மழையின் போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

மழை பெய்யும் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், உயர் மின்சார பகுதிகள் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் மின்சாதனங்களைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். மின்கம்பங்களில் கால்நடைகளைக் கட்டக்கூடாது.

வெள்ள அபாயம் அல்லது பிற இன்னல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தாழ்வான பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்திருந்தால், நிவாரண முகாம்களில் தங்க விரும்புவோர் இதே எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...