கோவை மதுக்கரையில் கஞ்சா விற்பனை: 25 வயது இளைஞர் கைது

கோவை மதுக்கரையில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். தனிப்படை காவல்துறையினர் நடத்திய சோதனையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மதுக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, ஜூலை 5 ஆம் தேதி தனிப்படை காவல்துறையினர் மதுக்கரை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (25) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஈஸ்வரனிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, கோவை போத்தனூர் போலீசார் நேற்று ஜூலை.14 ரோந்து பணி சென்றனர். அப்போது போத்தனூர்-பேருந்து நிலையம் வழியில் உள்ள காலி இடத்தில் சந்தேகம் படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்ததில், அவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. 

பின்னர் போலீசார் கஞ்சா விற்ற வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமத் தஸ்தாகீர்(26) என்பவரை கைது செய்தனர். பின் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...