கோவை அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் தாக்குதல்: போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுப்பு

கோவை பூச்சியூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் ஒருவர் குடியிருப்பாளர்களையும் பணியாளர்களையும் தாக்குவதாக புகார். போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குடியிருப்பாளர்கள் குற்றச்சாட்டு.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூச்சியூரில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாலிபர் ஒருவர் குடியிருப்பாளர்களையும் பணியாளர்களையும் தாக்குவதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த குடியிருப்பில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் சங்கர் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக சங்கர் குடியிருப்பாளர்களை அச்சுறுத்துவதோடு, தாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.



சமீபத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளில், சங்கர் அங்கு பணிபுரியும் வேலைக்காரப் பெண் மற்றும் பாதுகாவலரை தாக்குவது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் குடியிருப்பாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் சங்கர், கண்ணாடிகளை உடைத்து ஊசி எறிவதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், வீட்டின் கதவுகளை அடிக்கடி தட்டுவதால் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...