கோவை PRS வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட மோட்டார் வாகன பிரிவு அலுவலகம் திறப்பு

கோவை PRS வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமையான மோட்டார் வாகன பிரிவு அலுவலகம் மறுசீரமைக்கப்பட்டு, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனால் திறந்து வைக்கப்பட்டது. காவலர்களுக்கான புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.


கோவை: கோவை PRS வளாகத்தில் உள்ள கவாத்து மைதானம் அருகில் அமைந்துள்ள சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டிடம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.



இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து, பின்னர் பார்வையிட்டார்.



இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, கட்டிடத்தின் பின்புறத்தில் காவலர்களுக்கான பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.



இதில் காவலர்களுக்கான ஓய்வு அறை, இசைவாதியங்களுக்கான தனி அறை, மின்சார அறைகள் மற்றும் புதிய கழிவறைகள் ஆகியவை அடங்கும். இந்த புதிய வசதிகள் காவலர்களின் பணிச்சூழலை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நிகழ்வின் போது காவலர்களுடன் உரையாடிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், பழைய கட்டிடங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். "பழைய கட்டிடங்களை இடிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள ஓய்வு அறைகள் மற்றும் கழிவறைகள் கவாத்து பயிற்சி மேற்கொள்ளும் காவலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், குறிப்பாக பெண் காவலர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...