கோவை PRS வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட மோட்டார் வாகன பிரிவு அலுவலகம் திறப்பு

கோவை PRS வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமையான மோட்டார் வாகன பிரிவு அலுவலகம் மறுசீரமைக்கப்பட்டு, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனால் திறந்து வைக்கப்பட்டது. காவலர்களுக்கான புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.


கோவை: கோவை PRS வளாகத்தில் உள்ள கவாத்து மைதானம் அருகில் அமைந்துள்ள சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டிடம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.



இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து, பின்னர் பார்வையிட்டார்.



இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, கட்டிடத்தின் பின்புறத்தில் காவலர்களுக்கான பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.



இதில் காவலர்களுக்கான ஓய்வு அறை, இசைவாதியங்களுக்கான தனி அறை, மின்சார அறைகள் மற்றும் புதிய கழிவறைகள் ஆகியவை அடங்கும். இந்த புதிய வசதிகள் காவலர்களின் பணிச்சூழலை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நிகழ்வின் போது காவலர்களுடன் உரையாடிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், பழைய கட்டிடங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். "பழைய கட்டிடங்களை இடிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள ஓய்வு அறைகள் மற்றும் கழிவறைகள் கவாத்து பயிற்சி மேற்கொள்ளும் காவலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், குறிப்பாக பெண் காவலர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...