அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா கோவையில் நடைபெற்றது

கோவை கேரள கிளப்பில் தோல் தான விழிப்புணர்வு கருத்தரங்கம், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், ஆயுள் காப்பீடு விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.


கோவை: அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா கோவை கேரள கிளப்பில் நடைபெற்றது. இந்த விழாவில் தோல் தான விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம், அமைப்பின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி கௌரவித்தல், மற்றும் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றன.



இந்நிகழ்விற்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழக நிறுவனர் & தலைவர் ஆர்.கே.குமார் தலைமை உரையாற்றினார். பொதுச்செயலாளர் Dr.V.H.சுப்ரமணியம், கௌரவ தலைவர் சுந்தர வடிவேலு, மாநில தலைவி லதா அர்ஜூனன், மாநில தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



சிறப்பு விருந்தினர்களாக கங்கா மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராஜா சண்முக கிருஷ்ணன் மற்றும் உலக மலையாளி கவுன்சில் தலைவர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.



மருத்துவர் ராஜா சண்முக கிருஷ்ணன் தோல் தான விழிப்புணர்வு குறித்த விரிவான விளக்கங்களையும் அதன் அவசியத்தையும் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி ஆளுநரும், மூத்த வழக்கறிஞருமான சுந்தர வடிவேலு பேசுகையில், "அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தோல் தான விழிப்புணர்வு குறித்த நிகழ்வில் இவர்களுடன் ரோட்டரி கிளப்பும் இணைந்து கைகோர்த்து மக்களுக்கு தோல் தான விழிப்புணர்வை எடுத்துரைக்கும் என்பதில் உறுதி அளிக்கிறேன்" என்றார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...