உடுமலைப்பேட்டை திருப்பதி கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா கோலாகலம்

உடுமலைப்பேட்டை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா மூன்று நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மகா சுதர்சன ஹோமம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா மூன்று நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



இதனையொட்டி மகா சுதர்சன ஹோமம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இக்கோவிலில் வெங்கடேசப் பெருமாள், ஆண்டாள், பத்மாவதி தாயார், லட்சுமிஹயக்ரிவர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர், ரேணுகாதேவி அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

விழாவின் முதல் நாளான கடந்த 12-ம் தேதி புண்யாகவாசனம், விஸ்வக்சேன ஆராதனை, அங்குரார்ப்பண ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இரண்டாம் நாளான 13-ம் தேதி கும்பாபிஷேகம், ஹோமம் ஆரம்பம், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தன.

நிறைவு நாளான இன்று நவகலச விசேஷ திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.



இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...