கோவை மாவட்ட 75வது பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி: நா.கார்த்திக் எம்எல்ஏ பங்கேற்பு

கோவை உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் கோவில் திடலில் 75வது மாவட்ட பளுதூக்கும் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. நா.கார்த்திக் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பல்வேறு அரசியல் பிரமுகர்கள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 75வது பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி இன்று (ஜூலை 14) உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் திருக்கோவில் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை கோவை மாவட்ட பளுதூக்கும் வீரர்கள் சங்கம் மற்றும் உடையாம்பாளையம் பளுதூக்கும் வீரர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



அவர் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பீளமேடு பகுதி-3 செயலாளர் இரா.சேரலாதன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் பெ.மாரிச்செல்வன், கீதா சேரலாதன் எம்சி, உ.க.ராமசாமி, இரா.செந்தில், அறங்காவலர் வசந்த குமார், நாகேஸ்வரன், ICF கோபாலகிருஷ்ணன், ரங்கநாதன், டிஸ்கோ காஜா, எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், உடையாம்பாளையம் பளுதூக்கும் வீரர்கள் சங்க நிர்வாகிகள், கோவை மாவட்ட பளுதூக்கும் வீரர்கள் சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் ஆகியோரும் பங்கேற்றனர். பல உடற்பயிற்சி வீரர்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...