கோவை மாவட்ட 75வது பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி: நா.கார்த்திக் எம்எல்ஏ பங்கேற்பு

கோவை உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் கோவில் திடலில் 75வது மாவட்ட பளுதூக்கும் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. நா.கார்த்திக் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பல்வேறு அரசியல் பிரமுகர்கள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 75வது பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி இன்று (ஜூலை 14) உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் திருக்கோவில் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை கோவை மாவட்ட பளுதூக்கும் வீரர்கள் சங்கம் மற்றும் உடையாம்பாளையம் பளுதூக்கும் வீரர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



அவர் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பீளமேடு பகுதி-3 செயலாளர் இரா.சேரலாதன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் பெ.மாரிச்செல்வன், கீதா சேரலாதன் எம்சி, உ.க.ராமசாமி, இரா.செந்தில், அறங்காவலர் வசந்த குமார், நாகேஸ்வரன், ICF கோபாலகிருஷ்ணன், ரங்கநாதன், டிஸ்கோ காஜா, எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், உடையாம்பாளையம் பளுதூக்கும் வீரர்கள் சங்க நிர்வாகிகள், கோவை மாவட்ட பளுதூக்கும் வீரர்கள் சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் ஆகியோரும் பங்கேற்றனர். பல உடற்பயிற்சி வீரர்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...