கோவையில் பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவின் 135வது அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது

கோவை பேரூர் செட்டிபாளையம் மகாளியம்மன் கோவில் மைதானத்தில் பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவின் 135வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் பாரம்பரிய உடையில் கும்மியாட்டம் ஆடி விழாவை சிறப்பித்தனர்.


கோவை: கோவை, பேரூர் செட்டிபாளையம் உள்ள மகாளியம்மன் திருக்கோவில் மைதானத்தில் கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தை வளர்க்கும் விதமாக பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவினரின் 135வது அரங்கேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று கும்மியாட்டம் ஆடி விழாவை கோலாகலமாக்கினர்.



விழாவின் தொடக்கமாக, விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து பக்தர்கள் மகாளியம்மன் கோவிலில் வைத்து அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் விரதம் இருந்து தமிழர்களின் பாரம்பரிய உடையில் ஒரே நிறத்தில் சேலை அணிந்து கொண்டும், இளம் பெண்கள் பாவாடை சட்டை அணிந்து கொண்டும் முளைப்பாரி கையில் ஏந்தியவாறு ஜமாப் இசைக்கு ஏற்ப நடனமாடினர்.



பெண்கள் ஒன்றிணைந்து ஆடிய கும்மியாட்டம் காண்போரை கவர்ந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரங்கேற்றத்தை கண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், கொங்கு பகுதி மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தற்போது வள்ளி கும்மி நடன நிகழ்ச்சிகள் பிரபலமாகி வருவதாகவும், அதிகமானோர் இந்த நடனத்தை ரசித்து பார்த்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த விழா, கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தை பாதுகாத்து வளர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் தமிழர் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...