கோவையில் பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவின் 135வது அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது

கோவை பேரூர் செட்டிபாளையம் மகாளியம்மன் கோவில் மைதானத்தில் பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவின் 135வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் பாரம்பரிய உடையில் கும்மியாட்டம் ஆடி விழாவை சிறப்பித்தனர்.


கோவை: கோவை, பேரூர் செட்டிபாளையம் உள்ள மகாளியம்மன் திருக்கோவில் மைதானத்தில் கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தை வளர்க்கும் விதமாக பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவினரின் 135வது அரங்கேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று கும்மியாட்டம் ஆடி விழாவை கோலாகலமாக்கினர்.



விழாவின் தொடக்கமாக, விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து பக்தர்கள் மகாளியம்மன் கோவிலில் வைத்து அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் விரதம் இருந்து தமிழர்களின் பாரம்பரிய உடையில் ஒரே நிறத்தில் சேலை அணிந்து கொண்டும், இளம் பெண்கள் பாவாடை சட்டை அணிந்து கொண்டும் முளைப்பாரி கையில் ஏந்தியவாறு ஜமாப் இசைக்கு ஏற்ப நடனமாடினர்.



பெண்கள் ஒன்றிணைந்து ஆடிய கும்மியாட்டம் காண்போரை கவர்ந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரங்கேற்றத்தை கண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், கொங்கு பகுதி மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தற்போது வள்ளி கும்மி நடன நிகழ்ச்சிகள் பிரபலமாகி வருவதாகவும், அதிகமானோர் இந்த நடனத்தை ரசித்து பார்த்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த விழா, கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தை பாதுகாத்து வளர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் தமிழர் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...