PICME 3.0 பதிவு முறையை எளிமையாக்க கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கை..!

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், PICME 3.0 பதிவு முறையை எளிமையாக்குதல், சம ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


Coimbatore: கோவை தாமஸ் கிளப் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் சி. பரமேஸ்வரி பேசினார்.

பரமேஸ்வரி கூறுகையில், "புதிதாக உருவாக்கப்பட்டுள்ள PICME 3.0 பதிப்பில் பல சிக்கல்கள் உள்ளன. தற்போதைய முறையில், கர்ப்பிணிகளை பதிவு செய்யும்போது அவர்களின் அலைபேசி எண்ணுக்கு OTP அனுப்பப்படுகிறது. இது பல ஏழை எளிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, PICME 3.0 பதிவு முறையை எளிமைப்படுத்த வேண்டும்," என்றார்.



மேலும் அவர், "பொது சுகாதாரத் துறையில் ஆண்-பெண் ஊதிய வேறுபாடு நிலவுகிறது. சம ஊதியம் வழங்க கோரி அரசுக்கு கடிதம் அளித்துள்ளோம். 2500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

கிராம சுகாதார செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், தாய் சேய் மரண ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்றும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.



"அரசு தொடர்ந்து பெண்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. எங்கள் துறையையும் உற்று நோக்கி அரசு உதவி செய்ய வேண்டும். இல்லையெனில், நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல நேரிடும்," என பரமேஸ்வரி எச்சரித்தார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...