கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒப்பந்தப்படி கூலி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சனைக்கு 4 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தப்படி கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வலியுறுத்தியும், இதுவரை பிடித்தம் செய்த கூலி தொகையை வழங்க வலியுறுத்தியும் கடந்த 2-ம் தேதிமுதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 17 நாளாக நடைபெற்று வந்த போராட்டம் காரணமாக 1 லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் இயக்கப்படவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதுடன், நாள் ஒன்றுக்கு 22 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படுவதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்,

மேலும், இதுவரை 450 கோடி ரூபாயிக்கும் மேல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த போராட்டம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஆகியோருடன் நடைபெறவிருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் புறக்கணித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதனைக் கண்டித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர்.

இதனிடையே நேற்றிரவு காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் 4 நாட்களில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதன் பேரில் விசைத்தறி உரிமையாளர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...