தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை தாக்குதல்: இரண்டு ஆடுகள் பலி, வனத்துறை கண்காணிப்பு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை தாக்குதலில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள வண்டிக்காரனூரில் சிறுத்தை தாக்குதலில் இரண்டு ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு, வண்டிக்காரனூர் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்து, இரண்டு ஆடுகளைக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் இன்று (ஜூலை 11) சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

வனத்துறையினர், பாதிக்கப்பட்ட விவசாயியின் வீட்டு ஆட்டுக் கொட்டகையில் கேமராக்களைப் பொருத்தி, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...