தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை தாக்குதல்: இரண்டு ஆடுகள் பலி, வனத்துறை கண்காணிப்பு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை தாக்குதலில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள வண்டிக்காரனூரில் சிறுத்தை தாக்குதலில் இரண்டு ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு, வண்டிக்காரனூர் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்து, இரண்டு ஆடுகளைக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் இன்று (ஜூலை 11) சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

வனத்துறையினர், பாதிக்கப்பட்ட விவசாயியின் வீட்டு ஆட்டுக் கொட்டகையில் கேமராக்களைப் பொருத்தி, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...