தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை தாக்குதல்: இரண்டு ஆடுகள் பலி, வனத்துறை கண்காணிப்பு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை தாக்குதலில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள வண்டிக்காரனூரில் சிறுத்தை தாக்குதலில் இரண்டு ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு, வண்டிக்காரனூர் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்து, இரண்டு ஆடுகளைக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் இன்று (ஜூலை 11) சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

வனத்துறையினர், பாதிக்கப்பட்ட விவசாயியின் வீட்டு ஆட்டுக் கொட்டகையில் கேமராக்களைப் பொருத்தி, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...