பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் 26 கட்டிடங்களுக்கு சீல்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் அரசு விதிகளை மீறிய 26 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் அரசு விதிகளை மீறிய 26 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டது.

மகாலிங்கபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் வணிக கட்டிடங்களும் உள்ளன. இவற்றில் பல கட்டிடங்கள் வணிக பயன்பாட்டு அனுமதி பெறாமலும், விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதி மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று கடைகளுக்கு சீல் வைக்க வந்த நகராட்சி பொறுப்பு ஆணையாளர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகளை மகாலிங்கபுரம் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

பின்னர் அங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மொத்தம் 66 கடைகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் 40 கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளனர். எனவே மீதமுள்ள 26 கடைகளுக்கு மட்டுமே நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...