பொள்ளாச்சி அருகே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்

பொள்ளாச்சி அருகே கோவில்பாளையம் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் இரு மகன்களை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் காப்பாற்றினார். அவரது மனிதநேய செயல் பாராட்டப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே கோவில்பாளையம் பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் அவரது இரு மகன்களை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

பொள்ளாச்சி தாமரைகுளத்தைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தனது இரு மகன்களான தரணீஸ் மற்றும் தரணீந்திரனுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். கோவில்பாளையம் அருகே அவர்களது வாகனம் எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் மோதியதில் மூவரும் காயமடைந்தனர்.



சம்பவ இடத்தின் வழியாக கோவையிலிருந்து திரும்பி வந்த பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், விபத்தை கண்டதும் உடனடியாக தனது அரசு வாகனத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் சிகிச்சை தேவைப்பட்டதால், காயமடைந்தவர்களை கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பி வைத்தார்.

நகராட்சி தலைவரின் இந்த மனிதநேய செயல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அவசர காலங்களில் அதிகாரிகள் இது போன்ற மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசியம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...