பொள்ளாச்சி: குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சியில் 15 நாட்களாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தலையீட்டால் பிரச்சினை தீர்க்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி கைகாட்டி பகுதியில் பொள்ளாச்சி வால்பாறை பிரதான சாலையில், 15 நாட்களாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள முல்லை நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இது குறித்து அங்கலக்குறிச்சி திமுக ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நேற்று இரவு முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் பொள்ளாச்சி வால்பாறை பிரதான சாலையில் உள்ள கைகாட்டி பகுதியில் காலி குடங்களுடன் இன்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இது குறித்து அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் முறையாக தண்ணீர் விநியோகிக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...