கோவையில் காவல் உதவி ஆய்வாளர் என கூறி பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது

கோவை பேரூரில் காவல் உதவி ஆய்வாளராக நடித்து பெட்டிக்கடையில் ரூ.15,000 பறித்த முன்னாள் போலீஸ் அதிகாரியும், பாஜக நிர்வாகியுமான நபர் கைது செய்யப்பட்டார்.


Coimbatore: கோவை பேரூர் படித்துறை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் உள்ள ஒரு பெட்டி கடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த பண பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளி தன்னை பேரூர் உதவி ஆய்வாளர் என கூறி, பெட்டிக்கடை உரிமையாளர் வெற்றிவேலிடம் இருந்து ரூ.15,000 பறித்துக் கொண்டதோடு, அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி உக்கடம் காவல் நிலையம் பின்புறம் கொண்டு சென்று விட்டு விட்டு தப்பியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து வெற்றிவேல் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பேரூர் அருகே வசித்த பெருமாள் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், பெருமாள் 1997 பேஜை சேர்ந்த முன்னாள் தமிழக காவல்துறை அதிகாரி என்பது தெரியவந்தது. அவர் 2010-ல் போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் போது சீட்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், கைது செய்யப்பட்ட பெருமாள் பாஜக மாநகர் மாவட்ட முன்னாள் ராணுவ பிரிவில் துணைத் தலைவராக இருந்தவர் என்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட பெருமாளிடம் காவல்துறையினர் ஜூலை 10 அன்று மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...