கோவை எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் மாநகராட்சிக்கு 75 கழிவறை கோப்பைகள் வழங்கல்

கோவை எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தெற்கு மண்டலத்தின் கழிவறைகளுக்காக 75 இந்திய வகை கழிவறை கோப்பைகளை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியது. இந்த நன்கொடை ரூ.3.75 லட்சம் மதிப்புள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் மாநகராட்சிக்கு 75 இந்திய வகை கழிவறை கோப்பைகளை (Indian Class Set) வழங்கியது.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்களிடம் இந்த கழிவறை கோப்பைகளை எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் சுமிதா பத்மநாபன் நாயர் வழங்கினார். இந்த கழிவறை கோப்பைகள் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளின் கழிவறைகளில் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு கழிவறை கோப்பையின் மதிப்பு ரூ.5,000 ஆகும். மொத்தம் 75 கழிவறை கோப்பைகளின் மொத்த மதிப்பு ரூ.3.75 லட்சம் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை மேலாளர் கிரிதர் ரெட்டி, மேலாளர் நாகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாநகராட்சி தரப்பில் உதவி ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...