கோவை ரேஸ்கோர்ஸில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவை ரேஸ்கோர்ஸில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேரணியை தொடங்கி வைத்தார். செவிலியர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஜூலை 10 அன்று தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



இந்த விழிப்புணர்வு பேரணியில் செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்தியாவின் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த கருவள விகிதம் 3.1 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதத்துக்கும் குறைவாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாட்டின் குறிக்கோளான மக்கள் தொகையை நிலைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருள் "ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்பநலம், அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்" என்பதாகும். மேலும், தாய், சேய் நல்வாழ்வுக்கு சரியான வயதில் திருமணமும், போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...