பொள்ளாச்சி கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி; பாதுகாப்பு குறித்து புகார்

பொள்ளாச்சி அருகே கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு வசதிகள் இல்லாதது குறித்து சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் குரங்கு அருவி என்றழைக்கப்படும் கவியருவி, பல மாவட்டங்களிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 6 மாதங்களாக போதிய மழை இல்லாததால் அருவியில் வறட்சி ஏற்பட்டு, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்திருந்தனர்.

தற்போது, கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால், கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளித்துள்ளனர். இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



எனினும், தண்ணீர் கொட்டும் இடத்தில் தடுப்புக் கம்பிகள் உடைந்து காணப்படுவதால் உரிய பாதுகாப்பு இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.



மேலும், அருவியின் அருகே கடைகள் அமைக்க வேண்டும், பெண்கள் குளிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...