பொள்ளாச்சி கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி; பாதுகாப்பு குறித்து புகார்

பொள்ளாச்சி அருகே கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு வசதிகள் இல்லாதது குறித்து சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் குரங்கு அருவி என்றழைக்கப்படும் கவியருவி, பல மாவட்டங்களிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 6 மாதங்களாக போதிய மழை இல்லாததால் அருவியில் வறட்சி ஏற்பட்டு, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்திருந்தனர்.

தற்போது, கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால், கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளித்துள்ளனர். இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



எனினும், தண்ணீர் கொட்டும் இடத்தில் தடுப்புக் கம்பிகள் உடைந்து காணப்படுவதால் உரிய பாதுகாப்பு இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.



மேலும், அருவியின் அருகே கடைகள் அமைக்க வேண்டும், பெண்கள் குளிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...