கோவை ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற மளிகைக் கடை உரிமையாளர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குணசேகரன் என்ற மளிகைக் கடை உரிமையாளர் தீக்குளிக்க முயன்றார். மகள் காதல் திருமணம் செய்து பணம், நகைகளை எடுத்துச் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சலில் இச்சம்பவம் நடந்தது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் லோகநாதபுரம் முதலியார் வீதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகளும், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் மகனும் உள்ளனர். புவனேஸ்வரி கோவையில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த மாதம் 7ஆம் தேதி சுற்றுலா செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து வெளியேறிய புவனேஸ்வரி, 18ஆம் தேதி நவீன் குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். மேலும், வீட்டில் இருந்த 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 4 பவுன் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், குணசேகரன் தனது மனைவி மற்றும் மகனுடன் ஜூலை 8 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தார். அப்போது, அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் குணசேகரன் கூறுகையில், "எனது மகள் எடுத்துச் சென்ற 5 லட்சம் ரூபாய், 4 பவுன் தங்க நகை மற்றும் கடை விற்பனை மூலம் வங்கிக்குச் சென்ற G-pay தொகை ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை மீட்டுத் தரும்படி மனு அளித்துள்ளேன்" என்றார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...