சைபர் குற்றங்கள் அதிகரிப்பு: காவல்துறைக்கு சவால் - கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவையில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு குறித்தும், காவலர்களுக்கான மருத்துவ முகாம் பற்றியும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மற்றும் சைபர் குற்றங்கள் விசாரணை குறித்தும் விளக்கமளித்தார்.


Coimbatore: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது காவல்துறைக்கு தொழில்நுட்ப ரீதியாக ஒரு சவால் என்று தெரிவித்துள்ளார். அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான விரிவான மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசிய அவர், சைபர் குற்றங்கள் குறித்து வழக்குகளில் தனி குழுவினர் விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.

ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடத்தப்பட்ட இந்த முகாமில், ஆயுர்வேதம், உட்சுரப்பியல், பிசியோதெரபி, பெண்கள் தொடர்பான மருத்துவம், நுரையீரல் பரிசோதனை, பல் மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. காவலர்களின் உடல்நல ஆரோக்கியத்தைக் காக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.



மேலும், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளி பொதுமக்களுக்கென பிரத்யேக வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் பாலகிருஷ்ணன் உறுதியளித்தார்.

சைபர் குற்றங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அதையும் தாண்டி சிலர் ஏமாந்து விடுவதாகவும் கவலை தெரிவித்த அவர், இது போன்ற வழக்குகளில் தனி குழுவினர் விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்வார்கள் என்றும் உறுதியளித்தார்.



முகாம் துவக்க நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் சரவணன், சுகாசினி, உதவி ஆணையர் சேகர், ஸ்வர்கா பவுண்டேஷன் தாளாளர் தினேஷ் குமார் பாண்டியா, நிர்வாக அறங்காவலர் ஸ்வர்ணலதா, தாளாளர் குருபிரசாத் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...