'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்

கோவையைச் சேர்ந்த 'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன், பணமோசடி குற்றச்சாட்டுகளை அடுத்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றம் அவரை ஜூலை 19 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.


கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன், சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 5) சரணடைந்தார்.

'MYV3ADS' என்ற செயலி மூலம் வீடியோ விளம்பரங்கள் பார்த்தால் பணம் கிடைக்கும் என்றும், உறுப்பினர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறி நிறுவனத்தை நடத்தி வந்த சக்தி ஆனந்தன் மீது கடந்த ஜனவரி மாதம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு முதலில் கோவை சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்டு, பின்னர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. சக்தி ஆனந்தன் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார், ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதிபதி மலர் வாலண்டீனா முன்னிலையில் சரணடைந்த சக்தி ஆனந்தனை ஜூலை 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சக்தி ஆனந்தன் தரப்பில் ஜாமீன் கோரியும், ஜெயிலில் முதல் வகுப்பு வசதி வேண்டும் என்றும் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'MYV3ADS' நிறுவனம் மீதான பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...