'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்

கோவையைச் சேர்ந்த 'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன், பணமோசடி குற்றச்சாட்டுகளை அடுத்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றம் அவரை ஜூலை 19 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.


கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன், சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 5) சரணடைந்தார்.

'MYV3ADS' என்ற செயலி மூலம் வீடியோ விளம்பரங்கள் பார்த்தால் பணம் கிடைக்கும் என்றும், உறுப்பினர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறி நிறுவனத்தை நடத்தி வந்த சக்தி ஆனந்தன் மீது கடந்த ஜனவரி மாதம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு முதலில் கோவை சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்டு, பின்னர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. சக்தி ஆனந்தன் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார், ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதிபதி மலர் வாலண்டீனா முன்னிலையில் சரணடைந்த சக்தி ஆனந்தனை ஜூலை 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சக்தி ஆனந்தன் தரப்பில் ஜாமீன் கோரியும், ஜெயிலில் முதல் வகுப்பு வசதி வேண்டும் என்றும் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'MYV3ADS' நிறுவனம் மீதான பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...