'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்

கோவையைச் சேர்ந்த 'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன், பணமோசடி குற்றச்சாட்டுகளை அடுத்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றம் அவரை ஜூலை 19 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.


கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன், சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 5) சரணடைந்தார்.

'MYV3ADS' என்ற செயலி மூலம் வீடியோ விளம்பரங்கள் பார்த்தால் பணம் கிடைக்கும் என்றும், உறுப்பினர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறி நிறுவனத்தை நடத்தி வந்த சக்தி ஆனந்தன் மீது கடந்த ஜனவரி மாதம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு முதலில் கோவை சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்டு, பின்னர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. சக்தி ஆனந்தன் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார், ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதிபதி மலர் வாலண்டீனா முன்னிலையில் சரணடைந்த சக்தி ஆனந்தனை ஜூலை 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சக்தி ஆனந்தன் தரப்பில் ஜாமீன் கோரியும், ஜெயிலில் முதல் வகுப்பு வசதி வேண்டும் என்றும் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'MYV3ADS' நிறுவனம் மீதான பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...