கோவை CSI இமானுவேல் ஆலய உறுப்பினர்கள் பாதிரியார் பிரின்ஸ் கால்வினை கைது செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டம்

கோவை CSI இமானுவேல் ஆலய பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரை கைது செய்யக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஆலய உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை பந்தய சாலையில் உள்ள CSI இமானுவேல் ஆலயத்தின் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, அவரை கைது செய்யக் கோரி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலய உறுப்பினர்கள் ஆலய வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கடந்த மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற திருச்சபை ஞாயிறு கூட்டத்தின் போது, பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இந்து மதம் பற்றியும் அவர்களுடைய வழிபாடு பற்றியும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்கள் கூறுகையில், "பாதிரியார் பிரின்ஸ் கால்வின் தொடர்ந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார். திருச்சபைக்கு வரும் காணிக்கைகளை முறையாக கணக்கு காட்டாமல் கையாடல் செய்துள்ளார். மலபார் கோல்டு நிறுவனம் விற்றதில் வந்த பணத்தையும் கையாடல் செய்துள்ளார்" என்று குற்றம் சாட்டினர்.

மேலும், "பாதிரியார் மீது திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. திருமணம் தொடர்பான பிரச்சனைகள், பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன" என்று தெரிவித்தனர்.

"பாதிரியார் பிரின்ஸ் கால்வினை உடனடியாக கைது செய்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் செய்த குற்ற செயல்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். இது நடக்கும் வரை எங்களது உள்ளிருப்பு போராட்டம் தொடரும்" என்று உறுதியாக தெரிவித்தனர்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...