கோவை CSI இமானுவேல் ஆலய உறுப்பினர்கள் பாதிரியார் பிரின்ஸ் கால்வினை கைது செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டம்

கோவை CSI இமானுவேல் ஆலய பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரை கைது செய்யக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஆலய உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை பந்தய சாலையில் உள்ள CSI இமானுவேல் ஆலயத்தின் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, அவரை கைது செய்யக் கோரி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலய உறுப்பினர்கள் ஆலய வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கடந்த மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற திருச்சபை ஞாயிறு கூட்டத்தின் போது, பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இந்து மதம் பற்றியும் அவர்களுடைய வழிபாடு பற்றியும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்கள் கூறுகையில், "பாதிரியார் பிரின்ஸ் கால்வின் தொடர்ந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார். திருச்சபைக்கு வரும் காணிக்கைகளை முறையாக கணக்கு காட்டாமல் கையாடல் செய்துள்ளார். மலபார் கோல்டு நிறுவனம் விற்றதில் வந்த பணத்தையும் கையாடல் செய்துள்ளார்" என்று குற்றம் சாட்டினர்.

மேலும், "பாதிரியார் மீது திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. திருமணம் தொடர்பான பிரச்சனைகள், பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன" என்று தெரிவித்தனர்.

"பாதிரியார் பிரின்ஸ் கால்வினை உடனடியாக கைது செய்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் செய்த குற்ற செயல்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். இது நடக்கும் வரை எங்களது உள்ளிருப்பு போராட்டம் தொடரும்" என்று உறுதியாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...