கோவையில் 5 நாட்கள் நடைபெறும் அக்ரி இன்டெக்ஸ் வேளாண் கண்காட்சி: 150 கோடி ரூபாய் வருவாய் இலக்கு

கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 11 முதல் 15 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் அக்ரி இன்டெக்ஸ் 2024 வேளாண் கண்காட்சியில் 498 அரங்குகள் அமைக்கப்படும். சர்வதேச பங்கேற்புடன் 150 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் "அக்ரி இன்டெக்ஸ் 2024" என்ற தலைப்பில் 22-வது ஆண்டு வேளாண் கண்காட்சி சர்வதேச அளவில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி வரும் ஜூலை 11 ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.



இது குறித்து கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் கூறியதாவது: "வழக்கமாக நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டு ஐந்து நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், நான்கு நாட்கள் போதிய அளவில் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்ததன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது."

"இந்த கண்காட்சிக்காக 498 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மலேசியா, சிங்கப்பூர், சீனா, தென்கொரியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். மேலும், ஜப்பான் நாட்டிலிருந்து சிறப்பு வேளாண் குழுவினரும் கண்காட்சியைப் பார்வையிட்டு, அவர்களுடைய பல்வேறு தொழில்நுட்பங்களை எடுத்துக் கூற உள்ளனர்."

"விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்தி லாபம் பெற முடியும், அதற்கான வழிமுறைகள், தேவையான ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. மேலும், கால்நடைகளுக்கு தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் தொழில்நுட்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன."

"தமிழக அரசு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் வேளாண்துறை மற்றும் மத்திய அரசு ஆகியவை ஒருங்கிணைந்து இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன. சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கண்காட்சி மூலம் 150 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...