கோவையில் அறிமுகமாகும் சி.இ.ஐ.ஆர் புதிய தொழில்நுட்பம் - திருடப்பட்ட செல்போன்களை கண்டறிய உதவும்

கோவையில் சி.இ.ஐ.ஆர் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது திருடப்பட்ட செல்போன்களை கண்டறிய உதவும். மக்கள் ஆன்லைனில் புகார் அளிக்கலாம். 24 மணி நேரத்தில் செல்போன் முடக்கப்படும்.


Coimbatore: கோவை மாநகர சைபர் கிரைம் அலுவலகம் இன்று (ஜூலை 5) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆன்லைன் மோசடிகளும், செல்போன் திருட்டுகளும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, செல்போன் திருடப்பட்டால், அதன் IMEI எண்ணை வைத்து காவல்துறையினர் கண்டறிந்து வந்தனர். ஆனால், அனைத்து புகார்களையும் தீர்க்க முடியவில்லை. இந்நிலையில், மத்திய அரசு சி.இ.ஐ.ஆர் (Central Equipment Identity Register) என்ற நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இப்புதிய தொழில்நுட்பம் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் திருடப்பட்ட செல்போன்கள் எளிதில் கண்டறியப்படும். கோவை மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் இந்த சி.இ.ஐ.ஆர் போர்டலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

செல்போன் தொலைந்தால், உரிமையாளர்கள் சி.இ.ஐ.ஆர் இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும். போலியான புகார்களைத் தவிர்க்க, காவல்துறையால் வழங்கப்பட்ட CSR மற்றும் Aadhaar, ஓட்டுநர் உரிமம், PAN அட்டை போன்ற அடையாள ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும்.

புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட செல்போன் முடக்கப்படும் என கோவை மாநகர சைபர் கிரைம் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய முறை திருடப்பட்ட செல்போன்களை மீட்பதில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...