கோவையில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!

கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில் நடைபெறும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். சூயஸ் நிறுவனத்தின் மூலம் நடைபெறும் இப்பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் இன்று (05.07.2024) மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில் நடைபெறும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மத்திய மண்டலம், வார்டு எண் 62-க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள இரயில்வே பாதை அடிப்பகுதியில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை ஆணையர் பார்வையிட்டார்.



வடக்கு மண்டலம், வார்டு எண் 62-க்குட்பட்ட கவுண்டம்பாளையம் நல்லாம்பாளையம், ஜெய் நகரில் உள்ள இரயில்வே பாதை அடிப்பகுதியிலும் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். இப்பணிகளை விரைவாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, மத்திய மண்டலம், சுங்கம் வரிவசூல் மையத்தில் சூயஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வாடிக்கையாளர் சேவை இயந்திரத்தின் செயல்பாடுகளையும் ஆணையர் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, எழில், மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசகர் குழு தலைவர் கோபாலகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் நாகராஜ், ரவிக்கண்ணன், சூயஸ் நிறுவன திட்ட இயக்குநர் சங்கராம் பட்நாயக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...