கோவையில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!

கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில் நடைபெறும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். சூயஸ் நிறுவனத்தின் மூலம் நடைபெறும் இப்பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் இன்று (05.07.2024) மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில் நடைபெறும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மத்திய மண்டலம், வார்டு எண் 62-க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள இரயில்வே பாதை அடிப்பகுதியில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை ஆணையர் பார்வையிட்டார்.



வடக்கு மண்டலம், வார்டு எண் 62-க்குட்பட்ட கவுண்டம்பாளையம் நல்லாம்பாளையம், ஜெய் நகரில் உள்ள இரயில்வே பாதை அடிப்பகுதியிலும் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். இப்பணிகளை விரைவாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, மத்திய மண்டலம், சுங்கம் வரிவசூல் மையத்தில் சூயஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வாடிக்கையாளர் சேவை இயந்திரத்தின் செயல்பாடுகளையும் ஆணையர் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, எழில், மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசகர் குழு தலைவர் கோபாலகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் நாகராஜ், ரவிக்கண்ணன், சூயஸ் நிறுவன திட்ட இயக்குநர் சங்கராம் பட்நாயக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...