பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மது போதையில் உறங்கிய நபர்..!

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மது போதையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நபரை காவல்துறையினர் தட்டி எழுப்பி அனுப்பிவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Coimbatore: பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியது. மது போதையில் இருந்த ஒரு நபர் அலுவலக வளாகத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

நேற்று மாலை, அதிக அளவில் மது அருந்திய நிலையில் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த ஒரு நபர், தனது சொந்த வீட்டில் இருப்பது போல நிம்மதியாக குறட்டை விட்டு உறங்கினார். இதனைக் கண்ட அலுவலக ஊழியர்கள், முதலில் அவர் மயக்கமுற்று விழுந்துவிட்டதாக நினைத்து உதவ முயன்றனர். ஆனால், அவர் மது போதையில் இருப்பதை உணர்ந்ததும், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்ப முயன்றபோது, அவர் "எனக்கு தூக்கம் வருகிறது, தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள்" என்று மறுத்தார். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, காவல்துறையினர் அவரை எழுப்பியபோது, அவர் திடீரென எரிச்சலடைந்து, "ஏன் என்னை எழுப்பினீர்கள்? இது அரசு அலுவலகம், யார் வேண்டுமானாலும் வரலாம், உறங்கலாம்" என வாதாடினார்.

இறுதியாக, காவல்துறையினர் அவருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, அமைதியாக அப்பகுதியிலிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...