உடுமலையில் போதையில் அரசு பேருந்தை மறித்த நபர் கைது: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

உடுமலை அருகே வாளவாடியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் போதை நிலையில் அரசு பேருந்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் போதை நிலையில் அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியிலிருந்து வாளவாடி செல்லும் 41 எண் கொண்ட அரசு பேருந்தை வழிமறித்த பொன்ராஜ், "இந்த ஊருக்கு தண்ணீர் சரியாக வருவதில்லை. தண்ணீர் வரும் வரை பேருந்தை விடமாட்டேன்" என்று கூறி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரகளையில் ஈடுபட்டார்.



"நான் வேட்டியை மடிச்சு கட்டமாட்டேன். கட்டினா வேற மாதிரி ஆகிடும்" என்று வீர வசனம் பேசிக்கொண்டிருந்த பொன்ராஜை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொன்ராஜ் அடிக்கடி குடித்துவிட்டு அப்பகுதியில் ரகளையில் ஈடுபடுவது வழக்கம் என்று தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள், பொன்ராஜ் கைது செய்யப்பட்ட பிறகு நிம்மதி அடைந்தனர்.

தளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பொன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...