உடுமலையில் போதையில் அரசு பேருந்தை மறித்த நபர் கைது: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

உடுமலை அருகே வாளவாடியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் போதை நிலையில் அரசு பேருந்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் போதை நிலையில் அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியிலிருந்து வாளவாடி செல்லும் 41 எண் கொண்ட அரசு பேருந்தை வழிமறித்த பொன்ராஜ், "இந்த ஊருக்கு தண்ணீர் சரியாக வருவதில்லை. தண்ணீர் வரும் வரை பேருந்தை விடமாட்டேன்" என்று கூறி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரகளையில் ஈடுபட்டார்.



"நான் வேட்டியை மடிச்சு கட்டமாட்டேன். கட்டினா வேற மாதிரி ஆகிடும்" என்று வீர வசனம் பேசிக்கொண்டிருந்த பொன்ராஜை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொன்ராஜ் அடிக்கடி குடித்துவிட்டு அப்பகுதியில் ரகளையில் ஈடுபடுவது வழக்கம் என்று தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள், பொன்ராஜ் கைது செய்யப்பட்ட பிறகு நிம்மதி அடைந்தனர்.

தளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பொன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...