கோவை 'கவுண்டம்பாளையம்' திரைப்படம் வெளியீடு ஒத்திவைப்பு - நடிகர் ரஞ்சித் பேட்டி

கோவையில், 'கவுண்டம்பாளையம்' திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இயக்குனரும் நடிகருமான ரஞ்சித் அறிவித்துள்ளார். படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சரை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் நாளை வெளியாக இருந்த 'கவுண்டம்பாளையம்' திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குனரும் நடிகருமான ரஞ்சித் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வரையும், செய்தித்துறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த படத்தை வெளியிட கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருப்பதாகவும், திரையரங்க உரிமையாளர்கள் சொல்லும் போது வருத்தமாக இருப்பதாகவும் கூறினார்.

"நாடக காதலை பற்றியும், பெற்றோர்களின் வலியையும் படமாக எடுத்துள்ளேன். இதற்கு பல இடங்களிலிருந்து எதிர்ப்பு வருகிறது," என்று ரஞ்சித் விளக்கினார். மேலும், "ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. நான் அரசியல்வாதி கிடையாது. இந்த படத்தின் வெற்றிதான் என்னை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்லும் பதில்," என்றும் அவர் கூறினார்.

"செண்சார் சான்றிதழ் வாங்கியும் இந்த படத்தை என்னால் வெளியிட முடியவில்லை. ஆனால் யார் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் வெளியிடுவேன்," என்று ரஞ்சித் தெரிவித்தார்.

திரையரங்கில் படத்தை திரையிட்டால் கலாட்டா செய்வோம் என்று பலர் திரையரங்க உரிமையாளர்களை மிரட்டுவதாக ரஞ்சித் குற்றம்சாட்டினார். "திரையரங்கின் பாதுகாப்பு மிக முக்கியம். ஒரு நாடக காதலை பற்றியும், ஒரு நல்ல குடும்ப கதையை நான் எடுத்துள்ளேன். ஆனால் மிரட்டி என்னை போன்ற எளிய கலைஞனை வளர விடாமல் தடுக்கிறார்கள்," என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, கோவை மாநகர காவல் ஆணையரிடம் படத்தின் எதிர்ப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக புகார் மனு அளித்ததாகவும் ரஞ்சித் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...