கோவை 'கவுண்டம்பாளையம்' திரைப்படம் வெளியீடு ஒத்திவைப்பு - நடிகர் ரஞ்சித் பேட்டி

கோவையில், 'கவுண்டம்பாளையம்' திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இயக்குனரும் நடிகருமான ரஞ்சித் அறிவித்துள்ளார். படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சரை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் நாளை வெளியாக இருந்த 'கவுண்டம்பாளையம்' திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குனரும் நடிகருமான ரஞ்சித் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வரையும், செய்தித்துறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த படத்தை வெளியிட கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருப்பதாகவும், திரையரங்க உரிமையாளர்கள் சொல்லும் போது வருத்தமாக இருப்பதாகவும் கூறினார்.

"நாடக காதலை பற்றியும், பெற்றோர்களின் வலியையும் படமாக எடுத்துள்ளேன். இதற்கு பல இடங்களிலிருந்து எதிர்ப்பு வருகிறது," என்று ரஞ்சித் விளக்கினார். மேலும், "ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. நான் அரசியல்வாதி கிடையாது. இந்த படத்தின் வெற்றிதான் என்னை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்லும் பதில்," என்றும் அவர் கூறினார்.

"செண்சார் சான்றிதழ் வாங்கியும் இந்த படத்தை என்னால் வெளியிட முடியவில்லை. ஆனால் யார் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் வெளியிடுவேன்," என்று ரஞ்சித் தெரிவித்தார்.

திரையரங்கில் படத்தை திரையிட்டால் கலாட்டா செய்வோம் என்று பலர் திரையரங்க உரிமையாளர்களை மிரட்டுவதாக ரஞ்சித் குற்றம்சாட்டினார். "திரையரங்கின் பாதுகாப்பு மிக முக்கியம். ஒரு நாடக காதலை பற்றியும், ஒரு நல்ல குடும்ப கதையை நான் எடுத்துள்ளேன். ஆனால் மிரட்டி என்னை போன்ற எளிய கலைஞனை வளர விடாமல் தடுக்கிறார்கள்," என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, கோவை மாநகர காவல் ஆணையரிடம் படத்தின் எதிர்ப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக புகார் மனு அளித்ததாகவும் ரஞ்சித் தெரிவித்தார்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...