பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனைச் சாவடியில் வன குற்றங்களைத் தடுக்க மோப்ப நாய் மூலம் தீவிர சோதனை

பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனைச் சாவடியில் வனத்துறையினர் பைரவா என்ற மோப்ப நாய் மூலம் வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டனர். வன குற்றங்களைத் தடுக்கவும், வனப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் சோதனைச் சாவடியில் வன குற்றங்களைத் தடுக்கவும், வனப் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனத்துறையினர் மோப்ப நாய் மூலம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞான பாலமுருகன் தலைமையில், வனத்துறை துணை இயக்குனர் பார்கவ தேஜா உத்தரவின் பேரில் ஆழியார் சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. வனத்துறையினர் பைரவா என்ற மோப்ப நாயின் உதவியுடன் வாகனங்களை சோதனையிட்டனர்.

நேற்று மதியம் நடைபெற்ற இந்த சோதனையின் போது, சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், மதுபாட்டில்கள், போதை ஊசிகள் போன்றவை உள்ளனவா என தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வனப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...