வால்பாறை தேயிலை தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.450 கூலி வழங்க வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்


வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக நாளொன்றுக்கு ரூ.450 வீதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சார்பாக வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கேரளாவில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாயிக்கும் மேல் தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மிகவும் குறைவாகவே வழங்கப்படுகிறது. 



எனவே, அரசுக்கும், தேயிலை தோட்ட நிர்வாகத்தினரும் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலார்களுக்கு நாளொன்றுக்கு 450 ரூபாய் வீதம் வழங்க வேண்டும்' என்று உரையாற்றினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கௌரவ தலைவர் கோவிந்தராஜன், பொதுச்செயலாளர் மோகன், துணைத்தலைவர்கள் மாணிக்கம், சின்னப்பன், ஜீவனந்தம், பாலகிருஷ்ணன், அண்ணாதுரை ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம், ஆனைமலையை சேர்ந்த சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வால்பாறை காவல் நிலையத்தில் ஏஐடியுசி, பாஜக-வினர் புகார்

வால்பாறை ஏஐடியுசி-வினர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் பேசுகையில் அத்துமீறி கூட்டத்தில் நுழைந்த பாஜக-வினர் மைக்குகளை பிடுங்கி உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐஎம் மற்றும் ஏஐடியுசி-வினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே, ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டக் கூட்டத்தின் போது பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தனது உரையில், பிரதமர் மோடியை தவறாக பேசியதாக வால்பாறை பாஜக மண்டல பொதுச்செயலாளர் கார்த்திக் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அம்மனுவில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை தேச விரோதிகள் என்று மிகவும் கீழ் தரமாக பேசிய சிபிஐஎம் வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்க தலைவர் ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...