ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் 72-வது நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம். மருத்துவமனை தனது 72-வது நிறுவனர் தினத்தை கொண்டாடியது. இந்த விழாவில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.




கோவை, ஜூன் 29, 2024: ஜி.கே.என்.எம். மருத்துவமனை தனது 72வது நிறுவனர் தினத்தை, உன்னத நோக்கத்திற்காக தொலைநோக்கு சிந்தனையுடன் தங்களை அர்ப்பணித்த நிறுவனர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இத்தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறது. கோவையில் கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக மருத்துவ சேவை அளிப்பதில் நம்பிக்கை, நோய்களை குணப்படுத்துதல் மற்றும் மருத்துவ ரீதியான முன்னேற்றம் ஆகியவற்றுக்கு கலங்கரை விளக்கமாக ஜி.கே.என்.எம் மருத்துவமனை உயர்ந்து நிற்கிறது.

ஜி.கே.என்.எம். மருத்துவமனை 1952 ஆம் ஆண்டு 50 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையாக நிறுவப்பட்டது. மேலும் 650 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. சமீபத்தில் 30 மருத்துவ துறைகள் மற்றும் 200 மருத்துவர்களை உள்ளடக்கிய 3.3 லட்சம் சதுர அடியில் புதிய ஒருங்கிணைந்த வெளிநோயாளிகள் மருத்துவ மையம் திறக்கப்பட்டது. இது நாட்டிலேயே முதல் முறையாகும்.

நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதுதான் ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முக்கிய நோக்கமாகும். அதிநவீன மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் ஒவ்வொரு நோயாளிக்கும் விரைவான, துல்லியமான நோய் கண்டறிதல் மற்றும் உகந்த கவனிப்பு ஆகியன உறுதி செய்யப்படுகிறது. ஜி.கே.என்.எம். மருத்துவமனை ரோபோ-உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சைக்கு டா வின்சி ரோபோடிக் அமைப்பு போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தை நிறுவியுள்ளது.

தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் உள்ளடக்கிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள், மேம்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகள், 24 மணி நேரமும் அர்ப்பணிக்கப்பட்ட இளைஞோர் மற்றும் குழந்தைகளுக்கான அவசரநிலை சிகிச்சை வசதிகள், நவீன ஆய்வுக்கூடம் மற்றும் இமேஜிங் வசதிகள் உள்ளன. கோயம்புத்தூர் மக்களுக்கு எங்களது மருத்துவ சேவைகளை ஒரு பிரதியேக குழுவுடன் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று வழங்குகிறோம். மேலும் வீரபாண்டியில் கிராமப்புற சேவைகளை வழங்குதன் மூலமாக ஜி.கே.என்.எம். மருத்துவமனை அதன் வளாகத்திற்கு அப்பாலும் தன் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.









ஜி.கே.என்.எம். தனது 72வது நிறுவனர் தினத்தை கொண்டாடும் வேளையில், 29 ஜூன் 2024 அன்று மாலை 5.30 மணிக்கு மணி மேல்நிலைப் பள்ளியின் நானி பல்கீவாலா ஆடிட்டோரியத்தில், நிறுவனர்கள் மற்றும் அவர்களின் நீடித்த பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையிலும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையிலும் விழா நடைபெற்றது. சிறப்புமிக்க சேவை விருதுகள், செவல்தீரன் சிறப்பு விருதுகள் மற்றும் மெரிட்டோரியஸ் சர்வீஸ் விருதுகளை வழங்குவதன் மூலம் மருத்துவமனை பெருமிதம் கொள்கிறது.

ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர்.ரகுபதி வேணுசாமி அனைவரையும் வரவேற்றார். இந்த விருது வழங்கும் விழாவில் குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் தலைவர் திரு.எஸ்.பதி மற்றும் துணைத் தலைவர் திரு.ஆர்.கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.மனோகரன் நன்றியுரையாற்றினார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...