ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் 72-வது நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம். மருத்துவமனை தனது 72-வது நிறுவனர் தினத்தை கொண்டாடியது. இந்த விழாவில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.




கோவை, ஜூன் 29, 2024: ஜி.கே.என்.எம். மருத்துவமனை தனது 72வது நிறுவனர் தினத்தை, உன்னத நோக்கத்திற்காக தொலைநோக்கு சிந்தனையுடன் தங்களை அர்ப்பணித்த நிறுவனர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இத்தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறது. கோவையில் கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக மருத்துவ சேவை அளிப்பதில் நம்பிக்கை, நோய்களை குணப்படுத்துதல் மற்றும் மருத்துவ ரீதியான முன்னேற்றம் ஆகியவற்றுக்கு கலங்கரை விளக்கமாக ஜி.கே.என்.எம் மருத்துவமனை உயர்ந்து நிற்கிறது.

ஜி.கே.என்.எம். மருத்துவமனை 1952 ஆம் ஆண்டு 50 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையாக நிறுவப்பட்டது. மேலும் 650 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. சமீபத்தில் 30 மருத்துவ துறைகள் மற்றும் 200 மருத்துவர்களை உள்ளடக்கிய 3.3 லட்சம் சதுர அடியில் புதிய ஒருங்கிணைந்த வெளிநோயாளிகள் மருத்துவ மையம் திறக்கப்பட்டது. இது நாட்டிலேயே முதல் முறையாகும்.

நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதுதான் ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முக்கிய நோக்கமாகும். அதிநவீன மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் ஒவ்வொரு நோயாளிக்கும் விரைவான, துல்லியமான நோய் கண்டறிதல் மற்றும் உகந்த கவனிப்பு ஆகியன உறுதி செய்யப்படுகிறது. ஜி.கே.என்.எம். மருத்துவமனை ரோபோ-உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சைக்கு டா வின்சி ரோபோடிக் அமைப்பு போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தை நிறுவியுள்ளது.

தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் உள்ளடக்கிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள், மேம்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகள், 24 மணி நேரமும் அர்ப்பணிக்கப்பட்ட இளைஞோர் மற்றும் குழந்தைகளுக்கான அவசரநிலை சிகிச்சை வசதிகள், நவீன ஆய்வுக்கூடம் மற்றும் இமேஜிங் வசதிகள் உள்ளன. கோயம்புத்தூர் மக்களுக்கு எங்களது மருத்துவ சேவைகளை ஒரு பிரதியேக குழுவுடன் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று வழங்குகிறோம். மேலும் வீரபாண்டியில் கிராமப்புற சேவைகளை வழங்குதன் மூலமாக ஜி.கே.என்.எம். மருத்துவமனை அதன் வளாகத்திற்கு அப்பாலும் தன் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.









ஜி.கே.என்.எம். தனது 72வது நிறுவனர் தினத்தை கொண்டாடும் வேளையில், 29 ஜூன் 2024 அன்று மாலை 5.30 மணிக்கு மணி மேல்நிலைப் பள்ளியின் நானி பல்கீவாலா ஆடிட்டோரியத்தில், நிறுவனர்கள் மற்றும் அவர்களின் நீடித்த பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையிலும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையிலும் விழா நடைபெற்றது. சிறப்புமிக்க சேவை விருதுகள், செவல்தீரன் சிறப்பு விருதுகள் மற்றும் மெரிட்டோரியஸ் சர்வீஸ் விருதுகளை வழங்குவதன் மூலம் மருத்துவமனை பெருமிதம் கொள்கிறது.

ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர்.ரகுபதி வேணுசாமி அனைவரையும் வரவேற்றார். இந்த விருது வழங்கும் விழாவில் குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் தலைவர் திரு.எஸ்.பதி மற்றும் துணைத் தலைவர் திரு.ஆர்.கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.மனோகரன் நன்றியுரையாற்றினார்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...