மாரடைப்பால் மரணமடைந்த கோவை காவல் கண்காணிப்பாளர்: சக காவலர்கள் கண்ணீர் அஞ்சலி

கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். சக காவலர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் தாலுகாவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் சிகிச்சையின் போது திடீர் மரணம் அடைந்தார். கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வெற்றிச்செல்வனுக்கு வயது 56.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதிகாலையில் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, சூலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இடையில் இவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த மூன்று நாட்களாக கோவையில் உள்ள தலைமை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வெற்றிச்செல்வன், இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு காவல் துறை வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சக காவல்துறை அதிகாரியின் இறப்புக்கு காவலர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...