மாரடைப்பால் மரணமடைந்த கோவை காவல் கண்காணிப்பாளர்: சக காவலர்கள் கண்ணீர் அஞ்சலி

கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். சக காவலர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் தாலுகாவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் சிகிச்சையின் போது திடீர் மரணம் அடைந்தார். கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வெற்றிச்செல்வனுக்கு வயது 56.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதிகாலையில் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, சூலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இடையில் இவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த மூன்று நாட்களாக கோவையில் உள்ள தலைமை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வெற்றிச்செல்வன், இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு காவல் துறை வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சக காவல்துறை அதிகாரியின் இறப்புக்கு காவலர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...