கோவையில் நாட்டு வைத்தியரிடம் ரூ.40 லட்சம் மோசடி – அதிரடியாக மீட்ட கோவை சைபர் கிரைம் போலீசார்

சாய்பாபா காலனியில் சந்திரசேகர் என்ற நாட்டு வைத்தியரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.40 லட்சம் பணத்தை மீட்டு கோவை சைபர் கிரைம் போலீசார் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை, சாய்பாபா காலனியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (70). இவர் நாட்டு வைத்தியா். இவரிடம், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கைப்பேசியில் பேசிய மா்ம நபா், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சோ்ந்த அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்கள் பெயரில் மும்பைக்கு வந்துள்ள கூரியரில் போதைப்பொருள் இருப்பதாகவும், இதனால் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சந்திரசேகரின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டுள்ளார்.

அவரும், தனது வங்கிக் கணக்கு விவரங்களை அளித்துள்ளார். அதன்பின், சந்திரசேகரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தான் கூறும் வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும், சரிபார்த்துவிட்டு திருப்பிவிடுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சந்திரசேகா் தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.40 லட்சத்தை, அவா் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், அவா் கூறியபடி பணத்தைத் திரும்ப அனுப்பவில்லை. பின்னர் இது குறித்து சைபா் கிரைம் போலீஸில், சந்திரசேகா் ஜூன் 13-ஆம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட மா்ம நபரின் வங்கிக் கணக்குகளை முடக்கினா்.இதைத் தொடா்ந்து முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து நீதிமன்றத்தின் மூலம் ரூ.40 லட்சத்தை மீட்டு சந்திரசேகரிடம் அண்மையில் ஒப்படைத்தனா்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...