கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கௌரவ கர்னல் பதவி சின்னம் வழங்கும் விழா

தேசிய மாணவர் படையின் துணை இயக்குனர் காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி, கௌரவ கர்னல் பதவி சின்னத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு வழங்கினார்.


கோவை: தேசிய மாணவர் படை சார்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமிக்கு கௌரவ கர்னல் பதவி சின்னம் வழங்கும் விழா இன்று ஜூன்.27 பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அதன் இணைப்பு, மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தேசிய மாணவர் படையில் முனைவர் கீதாலட்சுமி ஆற்றிய தொண்டை போற்றும் விதமாக இவ்விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படையின் துணை இயக்குனர் காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி கலந்துகொண்டு கௌரவ கர்னல் பதவி சின்னத்தை துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 14 ஆம் ஆண்டு துணைவேந்தராக நான் இந்த பெருமையை பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த பதவியை பெரும் நான்காவது துணைவேந்தராக நான் உள்ளதாகவும், மேலும் இந்தியாவிலேயே அதிக கவுரவ பதவி சின்னத்தை பெரும் முதல் பெண்ணாக நான் இருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த பதவிக்கு ஏற்ப தன்னால் இந்திய மாணவர்களுக்கு என்னென்ன நற்பண்புகளை பறைசாற்ற முடியுமோ நிச்சயம் அதை அவர்களுக்காக செய்வேன் என்று உறுதி அளித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...