கனமழை காரணமாக நொய்யல் பேரூர் படித்துறையில் நீர்வரத்து அதிகரிப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி

மழையால் பேரூர் படித்துறையில் எட்டு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்து படிக்கட்டுகள் மூழ்கியடி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. ஆற்றில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை, குப்பைகளை, துணிகளை வீசக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


கோவை: மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகின்றது.



இதனால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்ற நிலையில், கோவை நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செந்நீராக மழை நீர் ஆற்றில் ஓடுகின்றது. இதனால் தண்ணீர் வராத பல்வேறு இடங்களிலும் தண்ணீர் வர ஆரம்பித்து இருக்கிறது.

நொய்யல் ஆற்றின் மிக முக்கியமான பகுதியான பேரூர் படித்துறையில் கடந்த எட்டு மாதங்களாக பெரிய அளவிலான நீர் வரத்து இல்லை. நொய்யல் ஆறு வறண்டது. இதனால் தர்ப்பணம் தருவோர் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருந்தனர். பேரூர் ஆற்றில் வெள்ளம் இல்லாததால் அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்கு போதுமான பாசனமும், கால்நடைகளுக்கு தண்ணீரும் இல்லாமல் இருந்தன.



இந்த நிலையிலே கடந்த ஒரு வார காலமாக பொழிந்து வரும் மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு, நொய்யல் பேரூர் படித்துறையிலும் ஓடுகிறது. ஐந்து படிக்கட்டுகள் மூழ்கி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. பொதுமக்கள் இதில் பிளாஸ்டிக் பொருட்களை, குப்பைகளை, துணிகளை வீசக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

வெள்ளம் வேகமாக செல்லும் பகுதிகளில் இறங்கவோ, குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என அதிகாரிகள் வலியுறுத்தினர். தர்ப்பணம் தருவோருக்கு தண்ணீர் அவசியம் என்ற நிலையில், ஆடி அமாவாசைக்கு தற்பொழுது வரும் வெள்ளம் போதுமானதாக இருக்கும் என புரோகிதர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். வறட்சி நீங்கும் விதமாக தொடர்ந்து மழை பொழியும் நிலையில், அதனை ரசிப்பதாகவும், நீர் நிலைகளில் போதுமானதாக பாதுகாப்புடன் இருக்க வேண்டுமெனவும், அப்பகுதியில் அதிகாரிகள் அறிவுறுத்தியதனை அப்பகுதி மக்கள் நினைவுகூர்ந்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...