கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மதுக்கரை, தொண்டாமுத்தூர் ஆகிய வட்டாரங்களில் நிலுவையாக உள்ள பணிகளை பதினைந்து நாட்களுக்குள் முடிக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம், ஆனைமலை வட்டாரத்திற்கான வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் இன்று ஜூன்.27 நடைபெற்றது.



இக்கூட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2023-2024 ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட 35 பணிகளில் 15 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நிலுவையாக உள்ள 20 பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அவற்றினை விரைந்து முடிக்கவும் பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மதுக்கரை, தொண்டாமுத்தூர் ஆகிய வட்டாரங்களில் நிலுவையாக உள்ள பணிகளை இன்னும் பதினைந்து நாட்களுக்குள் முடிக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.



15 முன்மொழிவுகள் பரிசீலனைக்கு ஆனைமலை வட்டாரம், கோட்டூர் மற்றும் வேட்டைக்காரன்புதூர் பகுதியில் மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்ட பெறப்பட்ட முன்மொழிவுகளும், வனத்துறையிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளும் மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரைக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் மகளிர் குழுவிற்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் புளி பதப்படுத்தி மதிப்புக்கூட்டுதல் செய்யும் பணிக்கான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு பரிந்துரைக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது. வளமிகு வட்டாரமாக கோயம்புத்தார் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆனைமலை வட்டாரம் முக்கிய வளர்ச்சிக் குறியீடுகளில் எந்தெந்த குறியீடுகளில் பின்தங்கி உள்ளது என கள ஆய்வு மற்றும் துறை வாரியான அறிக்கைகள் மூலம் கண்டறியப்பட்டு, அதனை நிவர்த்தி செய்யும் விதமாக திட்டங்கள் மூலம் பணிகளை தேர்வு செய்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார்.

மேலும் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மாநில திட்டக்குழுவினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் பேராசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். மேலும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தின்கீழ் அரசுத் திட்டங்களை எளிமையாகவும் விரைவாகவும் மக்களிடம் சேர்க்கும் விதமாக முன்மொழிவுகள் தயார் செய்து வழங்கவும் அதனை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்து அனுமதி பெற்று செயல்படுத்தலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...