குடிநீர் வழங்கக்கோரி பல்லடம் தாராபுரம் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்


திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சுமார் 150 மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படாததால் இன்று காலை பல்லடம் தாராபுரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காததாலும் குடிநீர் சப்ளை 18 நாட்கள் ஒரு முறை வருவதாகவும். உப்பு தண்ணீர் சப்பளை இரண்டு மணிநேரம் மட்டும் வருகிறது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் பஞ்சாயத்து உறுப்பினர்களை சந்தித்து பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அரசாங்க அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.



உள்ளாட்சி தேர்தல்களில் தாமதம் காரணமாக இந்த  பகுதி மக்களின்  நிலைகளை கண்டுகொள்ள கவுன்சிலர் இல்லாததாலும், இதனால் அதிகாரிகளும் மக்கள் பிரச்சனைகளுக்கு முறையான பதில்களும் வழங்காததாலும் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்குதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. அதிகாரிகள் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...